.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, August 13, 2016

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம் - காட்சி - 8, 9

இடம்: சிவாவின் வீடு
பாத்திரங்கள்: மனோ, சிவாவின் தந்தை,
----------------------------------------------------------------------------------
(சிவாவின் வீட்டு வாசற் கதவ்)

டக்...டக்...டக்

சிவாவின் தந்தை: யாரது?...ஓ..மனோவா...! வாடா...

மனோ: என்னடா ஆச்சு? நேத்து அந்த முத்து குளிச்சானா?

சி.தந்தை: இல்லடா..சிவா சொன்னான்...

மனோ: நான் அப்பவே நெனச்சேன்...!

சி.தந்தை: டேய் மனோ ! அவன் குளிக்கிறான்...குளிக்காம போறான்...நீ ஏன்டா இதுல இன்வால்வ் ஆற?

மனோ: அப்படி கேட்காதடா...! ஒரு ஆசிரியனா, பசங்களோட சுத்தம், சுகாதாரம் எனக்கு ரொம்ப முக்கியம்...நீ கூட நான் வந்த உடனே என்ன கேட்ட? உங்க ஸ்கூல்ல சுத்தம் பத்தி சொல்லித் தர்றதில்லையான்னுதானே !

சி.தந்தை: சரி...ஒத்துக்கிறேன்...இப்ப என்ன செய்யணும்?

மனோ: இது கரெக்ட்...சிவா எங்கே?

சி.தந்தை: அவன் கடைக்குப் போயிருக்கான்...இப்போ வந்திடுவான்...!

மனோ: சரி..சிவா வந்த உடனே அந்த முத்துவை ஒரு ஒன்பது மணி போல ...எப்படியாவது பார்க்  பக்கம் அழைச்சிட்டு வரச்சொல்லு...!

சி.தந்தை: ஆஹா..சொல்றேன்...ஆனா எதுக்குன்னு புரியலையே !

மனோ: அவன்கிட்ட இனிமே "குளிடா..குளிடா.."ன்னு கெஞ்சினா வேலைக்கு ஆகாது. நான் ஒரு வாளி தண்ணியோட வந்து அவன் தலையில கொட்டிடலாம்-ன்னு இருக்கேன்...

சி.தந்தை: ஓ,கே...டன்...

(மனோ புறப்படுகிறான்)



காட்சி - 9

இடம்: பூங்கா

முத்து: சிவா..! இப்ப எதுக்குடா என்னை இங்கே வரச் சொன்ன?

சிவா: ஒண்ணிமில்லடா..சும்மா அப்படியே பார்க்-ல காத்து வாங்கிக்கிட்டு அப்படியே பேசலாமுன்னுதான்... (தனக்குள்) மணி ஒன்பது ஆயிடுச்சே...!

முத்து: மணி ஒன்பதா? அதுக்கு என்ன இப்போ?

சிவா: ஒண்ணுமில்லடா..எங்க அப்பா 10 மணிக்குள்ள வீட்டுக்கு வரச் சொன்னாரு...அதான்...

முத்து: சிவா..எனக்கு ஏதோ நடக்கப் போகுது போல இருக்கு...! நான் கிளம்பறேன்...!

சிவா: டேய்..! உட்காருடா !

முத்து: இல்ல...நான் போகணும்..!

சிவா: வெயிட் பண்ணுடா...ப்ளீஸ்...

முத்து: சிவா..! அங்க பாரு...கையில ஒரு வாளியோட..மனோ சாரும், உங்க அப்பாவும் வர்றாங்க...

சிவா: (தனக்குள்) அடப்பாவி...!பார்த்துட்டானே...! சமாளிப்போம்...!
முத்து..அது அவங்க இல்லடா...வேற யாரோ...

முத்து: என்ன விடுடா..நான் போகணும்...(முத்து ஓடத் துவங்குகிறான்)

சிவா: டேய் முத்து...! ஓடாத...நில்லு...நில்லுடா...!

மனோ (அருகில் வந்தவுடன்): என்னடா சிவா..! அந்த முத்து பயல தப்பிக்க விட்டுட்ட...

சிவா: அவன் திருந்தமாட்டான் சார்...! விட்டுடுங்க...!

மனோ: சரி..சரி...நீ வீட்டுக்குப் போ...நானும்...உங்க அப்பாவும் அவனைத் துரத்திகிட்டுப் போறோம்...

சிவா: சரி சார் !

(துரத்துகின்றனர்)\




சிவாவின் தந்தை: மனோ..! எனக்கு மூச்சிறைக்குது...இப்படியே ஓடினா, கொஞ்சம் தூரத்தில ஒரு ஆறு வேற வரும்...நாம எங்கேயாவது அதுல போயி விழுந்திறப் போறோம்...!

மனோ: அதுவும் சரிதான்...நாமத் திரும்பிடலாம்...!

சிவாவின் தந்தை: மனோ ! அங்க பாருடா ! அவன் ஆத்துல விழுந்துட்டான்...!

மனோ: அய்யயோ..! வா..போய் பார்ப்போம்...!

(தொடரும்...)

1 comment:

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates