.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Wednesday, September 30, 2015

ஏற்றம் வரும் எதிரிலே !

பதிவர் திருவிழாவிற்காக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்துப் போட்டிகளின் கருவையும் (கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளுக்கான கருத்துக்கள்) ஒரு கவிதையில் உருவாக்கியுள்ளேன்...படியுங்கள் !
========================================================================

செந்தமிழ் மொழியாம் தமிழைக்
    கணிணினியின் தாய்மொழி ஆக்கி..
எந்தவோர் பணியும் மிகவும்
   எளியதாய் செய்திட வைப்பாய் !

பெண்ணினை தெய்வம் என்றே
   போற்றிய‌ நாட்டுக் குள்ளே...
எண்ணவே முடியாக் கொடுமை
   நடப்பதை முடித்தே வைப்பாய் !

மரங்களை மாய்த்தும் சாய்த்தும்
   கடலிலேக் கழிவை சேர்த்தும்...
தரம்கெட்ட செயல்கள் செய்யும்
   மனமற்ற மனிதர் சாய்ப்பாய் !

முன்னவர் காட்டிய வழியாம்..
  பண்பாடு என்னும் பாதை...
சொன்னஅப் பாதையை மாறி...
   செல்கின்ற எண்ணம் விடுப்பாய் !

மாற்றத்தை செய்திட இயலும்...
   மனதிலே நம்பிக்கை வைத்தால் !
ஏற்றத்தைக் கண்டிடும் நாட்கள்...
   எதிர்வரும் முயற்சியின் பயனால் !

உறுதிமொழி:

1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் "மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015" (வகை - 5 மரபுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்

2.  இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்
  

3 comments:

  1. ஆஹா நல்லாருக்கே வாழ்த்துகள்..வெற்றி பெற..

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வணக்கம்.வலைப்பதிவர் திருவிழாவிற்கு விழாக்குழு சார்பாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.நன்றி.

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates