பதிவர் திருவிழாவிற்காக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்துப் போட்டிகளின் கருவையும் (கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளுக்கான கருத்துக்கள்) ஒரு கவிதையில் உருவாக்கியுள்ளேன்...படியுங்கள் !
========================================================================
செந்தமிழ் மொழியாம் தமிழைக்
கணிணினியின் தாய்மொழி ஆக்கி..
எந்தவோர் பணியும் மிகவும்
எளியதாய் செய்திட வைப்பாய் !
பெண்ணினை தெய்வம் என்றே
போற்றிய நாட்டுக் குள்ளே...
எண்ணவே முடியாக் கொடுமை
நடப்பதை முடித்தே வைப்பாய் !
மரங்களை மாய்த்தும் சாய்த்தும்
கடலிலேக் கழிவை சேர்த்தும்...
தரம்கெட்ட செயல்கள் செய்யும்
மனமற்ற மனிதர் சாய்ப்பாய் !
முன்னவர் காட்டிய வழியாம்..
பண்பாடு என்னும் பாதை...
சொன்னஅப் பாதையை மாறி...
செல்கின்ற எண்ணம் விடுப்பாய் !
மாற்றத்தை செய்திட இயலும்...
மனதிலே நம்பிக்கை வைத்தால் !
ஏற்றத்தைக் கண்டிடும் நாட்கள்...
எதிர்வரும் முயற்சியின் பயனால் !
========================================================================
செந்தமிழ் மொழியாம் தமிழைக்
கணிணினியின் தாய்மொழி ஆக்கி..
எந்தவோர் பணியும் மிகவும்
எளியதாய் செய்திட வைப்பாய் !
பெண்ணினை தெய்வம் என்றே
போற்றிய நாட்டுக் குள்ளே...
எண்ணவே முடியாக் கொடுமை
நடப்பதை முடித்தே வைப்பாய் !
மரங்களை மாய்த்தும் சாய்த்தும்
கடலிலேக் கழிவை சேர்த்தும்...
தரம்கெட்ட செயல்கள் செய்யும்
மனமற்ற மனிதர் சாய்ப்பாய் !
முன்னவர் காட்டிய வழியாம்..
பண்பாடு என்னும் பாதை...
சொன்னஅப் பாதையை மாறி...
செல்கின்ற எண்ணம் விடுப்பாய் !
மாற்றத்தை செய்திட இயலும்...
மனதிலே நம்பிக்கை வைத்தால் !
ஏற்றத்தைக் கண்டிடும் நாட்கள்...
எதிர்வரும் முயற்சியின் பயனால் !
உறுதிமொழி:
1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் "மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015" (வகை - 5 மரபுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்
2. இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்
ஆஹா நல்லாருக்கே வாழ்த்துகள்..வெற்றி பெற..
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம்.வலைப்பதிவர் திருவிழாவிற்கு விழாக்குழு சார்பாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.நன்றி.
ReplyDelete