.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, December 22, 2021

Friday, December 6, 2019

ஆனியன் alias வெங்காயம்

நண்பர் ஒருவர் முகநூலில், "வெங்காயம்" என்ற தலைப்பில் கவிதை எழுதச் சொன்னார். அந்த முயற்சியை இங்கே பகிர்கிறேன் !


ஆனியன் alias வெங்காயம்

உணவகத்தில் சாப்பிடவே அவா ! - சென்று
      உட்கார்ந்து கேட்டேனே 'ஆனியன் ரவா !'
மன அகத்துள் எதிர்பார்ப்பு ! ஆசை ! - இதோ
     கொண்டு வந்து வைத்துவிட்டார் தோசை !

உண்ணுகின்ற வேளையிலே வாழ்வின் - ஒரு
     தத்துவத்தை உணர்ந்தேனே நானும் !
மண்ணுலக வாழ்க்கைஒரு "தேடலே" ! - இதோ
     தேடுகிறேன் 'ஆனியனை' தோசையிலே !

Monday, March 5, 2018

Tuesday, January 9, 2018

வீணையின் நாதம் !



​இசைக்கருவி பலஉண்டு அதற்கெல்லாம் மகராணி...
   வீணையெனும் வாத்தியமே ஏந்திடுவாள் கலைவாணி !
அசையாத மனம்கூட அசைத்திடுமே அதன்நாதம் !
   இனியஒலி யாவைக்கும் அதன்ஒலியே உவமானம் !

கடலோர மண்ணுக்கு பாய்ந்துவரும் அலையோசை...
   காதல்மதி கொண்டோர்க்கு கன்னியளின் வளையோசை...
மடல்பூக்கும் மலருக்கு தென்றல்தரும் முத்தஒலி...
   நடமாடும் மயிலுக்கு மழைஇடியின் சத்தஒலி...

அன்பான அன்னைக்கு தன்பிள்ளை மொழிமழலை...
   கவிபாடித் திரிவோர்க்கு செந்தமிழின் வார்த்தையலை...
ஒன்றாகச் சேர்ந்தோர்க்கு ஆனந்த சிரிப்பொலியாம்..
    இறைதேடும் பக்தர்க்கு ஆலயத்தின் மணியொலியாம் !

இருக்கின்ற நிலைபொறுத்து கேட்கின்ற ஓசையது..
   இனிதெனவே ஆகிடுமே...வீணையதன் நாதமென...
நறுக்கென்று எந்நாளும் நன்மொழியே பேசிடுவோம்..!
   நாதமென அம்மொழிகள் ரீங்காரம் செய்திடுமே ! 

 தினமணியில் படிக்க...

Sunday, December 31, 2017

வருடம் - 2017 - கவிதையாய்...

பொறுமை கொள்! மனமே ! பொறுமை கொள் !

தினமணி - கவிதைமணியில் எனது கவிதை

தினமணியில் படிக்க‌

Thursday, December 21, 2017

மனத்திற்கிட்ட கட்டளை

பொறுமை கொள்! மனமே ! பொறுமை கொள் !

தினமணி - கவிதைமணியில் எனது கவிதை






தினமணியில் படிக்க‌

Monday, November 20, 2017

யாருமில்லாத‌ மேடையிலே !

யாருமில்லா மேடையிலே பாடுபவன் நம்பிக்கை போல்..

தினமணி - கவிதைமணியில் எனது கவிதை

Tuesday, October 31, 2017

தீ தின்ற உயிர் !

இது போன்ற கொடுமைகளுக்கு மௌனமே பதிலாய் கிடைக்குமோ? என்றுதான் முடிவு கிட்டும்?!

தினமணி - கவிதைமணியில் எனது கவிதை


Thursday, September 14, 2017

சேர்த்து வைத்த கனவு !

பெற்றோர்கள், தன்னால் நினைவாக்க முடியாத கனவுகளை, தன் பிள்ளைகள் மூலம் நினைவாக்க முயற்சி செய்வர்...!



Shared from:
Dinamani


Wednesday, September 6, 2017

தலைப்பு 1: மனம் ஒரு குரங்கு ! தலைப்பு 2: வாழ்வும் சாவும் !

​இரு தலைப்பு - ஒரு கவிதை ?!....#Bluewhale

"அருகிலே உள்ள‌
அண்ணாச்சி கடைசென்று
அரைகிலோ அரிசி வாங்கி வா !"
அம்மா சொன்னது 
அவன் காதில் விழவில்லை !
அலைபேசியில்
அயராது ஆழ்ந்திருந்தான்...!
அரைமணி கழித்து
'என்னாச்சு? அரிசி' என்றால்..
'எப்போ சொன்ன' என்கின்றான் !

அன்னை சொல்கின்ற‌
சிறு வேலை செய்யாமல்
அன்றாட சோத்திற்கு
வழியேதும் செய்யாமல்...
எவனோ சொல்கின்ற
'டாஸ்க்'(TASK) எல்லாம் செய்கின்றான் !
தன்னை தன்கையால்
மாய்த்திடும் நாள் குறித்து....!




Thursday, August 24, 2017

விவேகம் தலைக்கு மட்டுமா?



விவேகம் என்றால் புத்தி கூர்மையாம் !
விவேகம் என்றால் தெளிய பார்வையாம் !
விவேகம் என்றால் பகுத்து ஆய்வதாம் !
விவேகம் என்றால் மதியின் நுட்பமாம் !

விவேகம் என்றால் தலைக்கு மட்டுமா?
விவேகம் என்றால் மனதிற் கில்லையா?

மனதில் விவேகம் இருந்துவிடில்..
நடைமுறைக் கொத்த நினைவு வரும் !
நல்லதே செய்கிற எண்ணம் வரும் !

மதியும் மனமும் இணைவாக‌
சரியாய் இருந்தால்தானே விவேகமாம் !



தமிழ்மணம் வாக்களிக்க...

Monday, August 21, 2017

என்ன தவம் செய்தேன்? - தினமணி - கவிதைமணி

தினமணி நாளிதழின் கவிதைமணி பகுதியில் 'என்ன தவம் செய்தேன்?' என்ற தலைப்பில் கவிதைகள் வரவேற்கப்பட்டன. தேர்வான கவிதைகளில் எனது கவிதையும் ஒன்று...மகிழ்வுடன் பகிர்கிறேன். 

தினமணி இணைய தளத்தில் படிக்க...


Saturday, August 12, 2017

ஷட் அப் பண்ணுங்க !

திரையிலே நடித்திடு வோரை
இறையென ஏத்தாதீங்க !
'குறை'யென அவர்படம் சொன்னால்
குமுறியே சீறாதீங்க !

SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!

வரைமுறைக் குள்ளே நல்ல‌
விமர்சனம் செய்தால் கூட‌
தரக்குறை வாகப் பேசி
தவறுகள் செய்யாதீங்க !

SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!

வாங்கிய பணத்திற் காக‌
வேண்டிய வேலை செய்வார் !
தூங்கிடும் உந்தன் வாழ்வை
தூக்கியா விடுவார் யோசி !

SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!

நாயகன் படத்தைப் பற்றி
நேர்மறைக் கருத்தைச் சொன்னால்
'தாய்'என போற்றும் பெண்மை
வாய்வழி அதனைச் சொன்னால்

உன்னுளே ஆடும் வக்கிரம்
உணர்வினைக் உருவாய் கொண்டு
பெண்ணினை வாட்டா தீங்க !
கண்ணையே குத்தா தீங்க !

SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!

காழ்ப்புணர் வோடு பேசி...
மாண்பினைக் குறைக்கா தீங்க !
பாழ்பட லாமா நம்ம‌
பைந்தமிழ் பண்பாடுங்க !

SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!

தமிழ்மணம் வாக்களிக்க...

Saturday, July 8, 2017

வதந்தி பரப்பாதே தோழா !

​​
வாடா தம்பி முரளி ! - நீ
  கிளப்பி டாதே புரளி !
வாடி யக்கா வசந்தி - நீ
   பரப்பி டாதே வதந்தி !

சோறு தின்னா தினம் தினமும் ! -ஒரு
    நோவு வந்து சேருமுன்னு...
நீரு குடிச்சா அடிக்கடி யாய் ! - உள்
   நெஞ்சடைச்சு போகுமுன்னு!

ஜோரா நிக்கும் தலைவரை யும்  - அவர்
   காலம் ஆனார் சோகமுன்னு...
தீரா சண்டை ஹீரோவுக்கும் - அவர்
  காதலிக்கும் வந்ததுன்னு...!

பூவா வித்தா அதுல கூட - பல‌
   ப்ளாஸ்டிக் பூவு உள்ளதுன்னு...
மாவா வித்தா அதுல கூட - ஒரு
   மாஞ்சா கலந்து  இருக்குதுன்னு.

தாலி கயிறைக் கட்டிகிட்டா -  பெரும்
   தாக்கம் தரும் ஆபத்துன்னு...
காலி டப்பா கையில் வெச்சா - பணம்
   காலியாகிப் போகுமுன்னு..

தோதா ஒரு திட்டம் வந்தா - அதத்
   தொடர்ந்து வரும் குழப்பமுன்னு...
ஏதோ ஒண்ணு சொல்லிகிட்டு - இங்க
    ஏய்க்கிறது பொழுதுபோக்கா?


​வாடா தம்பி முரளி ! - நீ
  கிளப்பி டாதே புரளி !
வாடி யக்கா வசந்தி - நீ
   பரப்பி டாதே வதந்தி !

Friday, June 2, 2017

இசையே ! வாழ்க !



இசைக்கொரு உருவம் தரவே
 விரும்பினன் நான்முகன் ப்ரம்மா !
தசையோடு ரத்தம் எல்லாம்
  சுருதியும், லயமும் கூட்டி..
அவ்வுரு தன்னைக் கருவாய்
   சுமந்தது இசையின் அம்மா !

கலைமகள் என்னும் வாணி !
   கலைகளின் அதிபதி ராணி !
அலைகடல் புவியின் வாழ்வில்
   அமைதியில் மனதைக் கட்டும்
இசைக்கடல் வேண்டும் என்றே
   திறனெல்லாம் அவ்வுருக்கே தந்தாள் !

வயல்வெளிப் பாடல் எல்லாம்
   திரையிலேத் தேனாய் கேட்க..
அயற்சிகள் நீக்கும் புதிய‌
    அரும்பெரும் மருந்தாய் ஒன்றை
மருத்துவம் கண்டது இங்கே !
   மகத்துவம் என்னே சொல்வேன் !

விருதுகள் இவனிடம் வந்தால்
  வேகமாய் பெருமை கொள்ளும் !
சுருதிகள் இவன்கை பட்டால்...
  கிருதியாய் தேனை வார்க்கும் !
அரியதோர் பிறவியாம் ராசா !
   மனதிலே பூத்திடும் ரோசா !

ஆயிரம் ஆயிரம் ஆண்டு
   அவனியில் அவனும் வாழ்ந்து
ஆயிரம் கோடி பேரின்
   இதயத்தை இசையால் ஆண்டு
சாதனை மேலும் செய்ய‌
   சரஸ்வதி அருளும் செய்வாள் !

பிரியமுடன்...
பி.பிரசாத், 

Thursday, March 2, 2017

சட்டம் செய்வோம் !



பெண்ணைப் பாலியலாய் வதைசெய்தார் எனும்சேதி..
    படிக்கும் போதெல்லாம் மனக்குமுறல் கொள்கிறது !
என்றே திருந்திடுவார் எனும்கேள்வி எழுகிறது !
   என்றும் விடையில்லை எனும்விடையே சேர்கிறது !

பொம்மைத் துப்பாக்கி 'கேப்' போட்டு சுடுவதுபோல்...
    பெண்ணைப் பொருளாக்கி 'ரேப்' செய்து போகின்றார் !
தன்மை இல்லாமல் தரம் தாழ்ந்து நடக்கின்றார் !
   தன்குல மானமெலாம் வானத்தில் விடுகின்றார் !

திரையில் காண்பதெலாம் செய்திடவே விழைகின்றார் !
    நிழலைப் பின் தொடரும் நெறுமூடர் ஆகின்றார் !
முறையில் லாதவொரு நடத்தையினைக் கொள்கின்றார் !
   மண்ணின் நெறியெல்லாம் மண்ணோடு புதைக்கின்றார் !

சட்டம் அதுசெய்வோம் பெண்கொடுமைக் கெதிராக...
   சீராய் அமல்செய்வோம் அதையிங்கு நேராக..!
நித்தம் நடக்கின்ற கொடுமைகட்கு முடிவாக...
   யுத்தம் அதுசெய்வோம் ஒருசேர விரைவாக...!
     

Friday, January 13, 2017

இந்த பொங்கல்....!



இனிய செங்கரும்பை
கடித்து சார் உறிஞ்சி
சக்கையை எறிந்துவிட..
ஈக்கள் மொய்த்திடுமே !

காசு லெஸ்ஸாக‌ (cash-less?) 
கரும்பே வாங்காமல்..
"E-கரும்பு" எனச்சொல்லி
படைக்கின்ற பொங்கலாச்சு !

துள்ளி வருகின்ற‌
ஜல்லிக்கட்டு காளையுடன்
மல்லுகட்டும் வீரர்களை..
தள்ளி நின்று பார்த்தாலும்
உள்ளம் அள்ளிப் போயிடுமே !

'மிருக வதை' என்று சொல்லி
அதற்கிங்கே ஆச்சு தடை..
மாட்டோடு மல்லுகட்டும் வீரரெல்லாம்...
கோர்ட்டோடு மல்லுகட்டும் பொங்கலாச்சு !

நெல் கலங்கள் நிரப்பி வைத்து
மகசூலை அளவுசெய்து..
உழவர் மனம் மகிழ்வோடு
ஊருக்கெலாம் படைத்திடுமே !

நீர் வரத்து நின்றதனால்
சோர்வுற்று உழவரெலாம்
சோறுடைக்க வழியின்றி
வாழ்வுடைத்த பொங்கலாச்சு !

ஆயிரம்தான் ஆயிடினும்...
மானமிகு தமிழினத்தின்
தனிப்பெருமை அதைஉணர்த்தும்
'போகி' , 'பொங்கல்'  திருநாளில்
ஆயிரம் ஆயிரமாய் 
வாழ்த்துக்களை சொல்லிடுவோம்...!

நாளை எனும் நாளை இங்கே
நல்லதொரு மாற்றம் தரும் !
பொங்கல் முதல் மங்கலமே
பொங்கி வரும் நம்பிடுவோம்...!


Sunday, August 21, 2016

சில்வர் சிந்து - பூப்பந்து !



கிடைக்குமா பதக்கம் ஒன்று...
   எதிர்பார்ப்பு தினமும் உண்டு...
தடைகளைத் தாண்டிச் சென்று...
   வெற்றியைத் தழுவிக் கொண்டு...
புயலென வந்தாள் சிந்து...!
     போட்டியில் பதக்கம் வென்று...!

'பேட்மிட்டன்' எனும் பூப்பந்து...!
    போட்டியில் வென்றாள் சிந்து..!
'ஹேட்ஸ் ஆஃப்' சொல்லிக் கொண்டு...!
    ஹேப்பியாய் பகிர்ந்து கொள்வோம்...
உழைப்பதன் பெருமை உணர்த்தும்
   உதாரணம் மீண்டும் கண்டோம் !

'சோதனைக் காலம்' என்று
  பெண்சிசு பிறந்தால் நினைக்கும்
வேதனை நாட்டில் உண்டு...
   வேறென்ன சொல்வது இன்று...?!
சாதனை செய்வது எல்லாம்..
   பெண்மையே புரிந்தால் நன்று !

Monday, May 9, 2016

பகலவன் !



பகலிலே 'பளிச்'சென்று
  பாரெல்லாம் ஒளிபரப்பும்
பகலவனே ! உன் சுடரால்
  மின்னாற்றல் சேமிப்பாய் !

வைகறைப் பொழுதினிலே
   மெய்நனைய நடந்தாலே..
வைட்டமின் சேர்த்திடுவாய்!
    வைத்தியராய் உதவிடுவாய் !

மரங்களும் செடிகொடியும்
   மகரந்த சேர்க்கையுற‌
வரமெனவே ஒளிதருவாய் !
   மலர்,கனியும் ஆக்கிடுவாய் !

சுடர்மிகு ஒளிக்கற்றை
    சூட்டோடு படர்ந்திடவே
உலர்ந்திடுமே ! நீரதனில்
   நனைந்தவைகள் யாவையுமே !

நன்றிதனை நவின்றிடவே
   தைத்திங்கள் நாளதனில்
அன்புடனே படைத்தோமே..
   படையலினை உனக்கிங்கு !

வெம்மையின் கதிராலே
   வாட்டுகிறாய் ! எமையெல்லாம் !
பொம்மையா புவியுனக்கு...
   பொறுத்தருள வேண்டுகின்றேன் !

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates